புல்லட்டில் சைக்கிள் மோதி இருவர் பலி...

சார்பதிவாளர் அலுவலக ஊழியர் ஓட்டி வந்த பைக் சாலையில் சென்ற சைக்கிள் மீது மோதியதில் அவருடன் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

புல்லட்டில் சைக்கிள் மோதி இருவர் பலி...

தென்காசி | ஆலங்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தென்காசி ரயில் நகரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மகன் மதிபிரவீன் (24) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்த நிலையில் பணி முடிந்து ஆலங்குளம் அடுத்துள்ள முத்துகிருஷ்ணபேரி தனியார் பெட்ரோல் பங்க் அருகே தனது புல்லட் பைக்கில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது முத்துகிருஷ்ணபேரி கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(42) என்னும் கூலி தொழிலாளி சைக்கிளில் டீக்கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது மதி பிரவீன் ஒட்டி வந்த புல்லட் பைக் ஹரி கிருஷ்ணன் ஓட்டி வந்த சைக்கிள் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் மதிபிரவீன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தனர் இருவரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோதிய வேகத்தில் சைக்கிள் மூன்று துண்டுகளாகவும் பைக் முழுவதும் சேதமடைந்தும் காணப்பட்டது. விபத்து குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | ஓடாது ஜீவா... சரி செய்த ஆட்டோ தானாக ஓடிய ஆட்டோவால் பரபரப்பு...